Tuesday, July 2, 2024

கழுகும், மண்ணை கிளறும் கோழியும் - பாகம் 1

 

முன் காலத்தில் எந்த பறவைக்கும் பறக்கும் படி இறகுகள் அமையவில்லை . ஒரு பஞ்சகாலத்தில் ஒரு கழுகுக்கு உணவு தேடி  வெகு தூரம் அலைய வேண்டி வந்தது . நடந்தே அந்த கழுகு மிகுந்த தூரம் சென்றதால் அதற்கு கால் வலித்தது . பறக்க முடிந்தால் எவ்வளவு சீக்கிரமாக தான் அலைந்து திரிந்து உணவு தேட முடியும் என்று எண்ணியது .  சிறகு இருந்தால் இவ்வளவு தூரம் நடக்க வேண்டி இருக்காது என்று எண்ணியது . இப்படி எண்ணியபடியே  களைத்து போய் தரையில் தூங்க ஆரம்பித்தது.  அப்பொழுது பயணம் செய்வதற்கு ஒரு சுலபமான வழியை கண்டுபிடிக்கலாம் என்று கொஞ்சம் உரத்த குரலில் புலம்பிக் கொண்டிருந்தது. 



இதைக் கேட்ட ஒரு கோழி அதைப்பற்றி  எண்ணிக் கொண்டு அதுவும் தூங்கச் சென்றது.  கோழி மறுநாள் எழுந்து கொண்ட போது அதற்கு ஒரு அருமையான யோசனை தோன்றியது . தன் அருகில்,  நிறைய கீழே விழுந்து கிடந்த சிறகுகளை  பார்த்தது.

கோழிக்கு இன்னும் சிறிது சிறகுகள் இருந்தால், தன் இறகுகளில் தைத்து எளிமையாக பறக்கலாம் என்று தோன்றியது.  ஆனால் இவற்றை வைத்து தைப்பதற்கு அதனிடம்  ஊசி இல்லை . அந்த ஊரிலேயே கழுகிடம் மட்டும்தான் ஒரு ஊசி இருந்தது.  கோழி அந்த கழுகிடம் இந்த யோசனையை கூறி, ஊசியை கேட்டவுடன்,  கழுகுக்கு தானே ஏன் இதை செயல்படுத்தக் கூடாது என்று தோன்றியது.  உடனே அந்த கழுகு அருகில் இருந்த நிறைய சிறகுகளை ஒன்று சேர்த்து தன் இறகில் சேர்த்து தைத்துக்  கொண்டு பறக்க ஆரம்பித்தது . அதனால் உயர உயர பறந்து எளிதாக உணவு சேகரிக்க முடிந்தது.

கோழிக்கு தன்னுடைய யோசனை கழுகினிடம் பலித்ததால் தானும் அதனுடைய ஊசியை கடன் வாங்கி, தனக்கும் சில சிறகுகளை சேர்த்து தன் இறகில் தைத்து பறக்க முயன்றது.

உடனே அதுக்கு தெரிந்து விட்டது தன்னால் அவ்வளவு எளிதாக பறக்க முடியாது என்று. ஆனாலும் பிறகு முயற்சி செய்வதற்காக,  அந்த ஊசியை தனியாக வைத்துவிட்டு தன்னுடைய குஞ்ஜுகளுக்கு உணவு சமைக்க ஆரம்பித்தது. அந்த ஊசியைப் பற்றி அது அது மறந்து விட்டது.  ஆனால் அங்கு இருந்த மற்ற பறவைகள்,  கழுகு எளிமையாக பறப்பதை பார்த்து அந்த கோழியிடமிருந்து  ஊசியை வாங்கி தைத்துக் கொண்டு பறக்க ஆரம்பித்தன.  பறந்து உணவு தேடுவதன் எளிமையை அவைகள் உணர்ந்து கொண்டன.  கோழிக்கு தன்னுடைய யோசனை மீதி பறவைகளுக்கு பலித்ததில் சந்தோஷமாக இருந்தது.



(இந்த கதை ஆப்பிரிக்க பழக்கதைகளில் இருந்து தழுவி எழுதப்பட்டது)


No comments:

Post a Comment