Tuesday, July 2, 2024

இளவரசியும் தங்க சிங்கமும் - பாகம் 6

 

மறுநாள் காலையில் அந்த அரசன் அந்த தங்க சிங்கத்தை திரும்ப தன்னுடைய அரண்மனைக்கு எடுத்துச் சென்றார் . அந்தக் கிழவியும் முன்பு கூறியதைப் போல வந்து அந்த சிங்கத்தை வாங்கிக் கொண்டு திரும்பச் சென்றார்.  மூன்றாவது மகன் சிங்கத்திடமிருந்து வெளியே வந்து அந்த கிழவிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

பிறகு அரண்மனைக்கு திரும்பி வந்து அரசன் கூறிய அந்தப் போட்டியில் தான் கலந்து கொண்ட விரும்புவதாக கூறினார்.

அந்த அரண்மனையில் மூன்றாவது மகன் தங்கியிருந்து அங்கே இங்கே சுற்றிப் பார்ப்பது போல் ஏழு நாட்கள்  நடித்துக் கொண்டிருந்தார் . அரண்மனையில் கிடைத்த உணவை உண்டு சுகமாக இருந்தார்.

எட்டாவது நாள் அந்த அரசனின் அறைக்குச் சென்று அங்கு தரையில் இருந்த செங்கற்களை அகற்ற கூறினார்.  அந்த அரசன் அதிர்ச்சி அடைந்தாலும் அந்த இளைஞன் கூறியபடி செய்தார்.  அரண்மனை அமைச்சர்களும் அருகில் இருந்த தால் அரசனால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை . அவர்கள் எதிரில் அரசனால் அந்த செங்கற்களை  அகற்ற முடியாது,  என்று கூறவும் முடியவில்லை.  அரசன் முன்பு சென்ற அதே பாதையில் இளைஞன் செல்ல ஆரம்பித்தார் . படி வழியாக இறங்கி ஏழாவது கதவைத் திறந்து அங்கு உள்ள 12 அழகான பெண்களை பார்த்தார் . பின்னால் வந்து கொண்டிருந்த அரசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது . ஆனாலும் இந்த 12 பேரில் நிச்சயம் இந்த இளைஞன் தன் மகளை கண்டுபிடிக்க முடியாது என்று அந்த அரசன் நம்பினான் . ஆனால் அந்த இளைஞனோ மிகவும் சுலபமாக இளவரசியின் கையை பிடித்துக் கொண்டு வெளியே வந்தார் . அவருக்கு தான் தெரியுமே அந்த இளவரசி கையில் சிவப்பு கயிறை அணிந்திருந்தது .

இவ்வாறாக அந்த மூன்றாவது மகன் அந்தப் போட்டியில் வென்று அந்த இளவரசியை மணந்து,  தன்னுடைய நாட்டிற்கு அழைத்து வந்தான் . என்றாலும் அந்த இளவரசியை கண்டுபிடிக்க முடியாமல் தன் இரண்டு சகோதரர்கள் இறந்தது அவனுக்கு சிறிது வருத்தம் தான்.  ஆனாலும் தன் முயற்சியில் வெற்றி பெற்றதில் மகிழ்ந்திருந்தார்.

தனக்கு உதவி செய்த கிழவியையும் மறக்காமல் அவளுடைய மீதி வாழ்நாட்கள் சுகமாக இருக்கும் படி ஏற்பாடுகளையும் செய்தார்.

இதன் பிறகு அந்த இளவரசியுடன் வெகு காலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்தார்

( இந்த கதை இத்தாலிய பழங்கதையிலிருந்து தழுவி எழுதப்பட்டது)

 

முற்றும்


No comments:

Post a Comment