Sunday, March 31, 2024

Empress Jokwa and the Path of the Sun and the Moon - Part Two


Eiko stopped Hako. “I must be the one who should become the General of the Front Forces.” Eiko told Hako.

Hako grew angry when he heard that. “I have been appointed as the General by the Empress herself. How dare you stop me?”

Even as he was speaking Hako drew out his lance and tried to hit Eiko. However Eiko was faster and he avoided the injury. Eiko moved even faster and he wounded the head of the General’s horse. 



Having no other choice Hako got down from his horse and he was above to attack Eiko from the ground, when in a swift move Eiko removed the badge of commandership and Eiko rode away from there.

Eiko had been so fast that Hako did not know what to do.

Empress Jokwa had seen the entire fight between Eiko and Hako and she realized that Eiko had been very fast. 

So she reached a decision and she made both Eiko and Hako as the General of the Front Forces of the Army. Both of them together were to lead the army against Kokai. Eiko would lead the right wing of the army and Hako would lead the left wing.

The two generals reached the fort where Kokai lived. When Kokai saw the two of them he was sure that he could defeat them in one breath. 



Kokai seized an iron rod and mounted a black horse and attacked the two of them.

Adapted from Japanese Folk Tales


Saturday, March 30, 2024

Empress Jokwa and the Path of the Sun and the Moon - Part One


Long ago during the age of giants, a kingdom was ruled by Emperor Fuki.

Emperor Fuki’s sister was Empress Jokwa. Empress Jokwa was a wonderful ruler and a powerful woman.

During Emperor Fuki’s rule there lived another giant called Kokai. 

Kokai was taller than Empress Jokwa and he was entirely covered with hair and his face was black as iron. Kokai was also a wizard and he performed powerful magic easily.

After Emperor Fuki’s death Kokai wanted to rule the kingdom, but his plan did not succeed because Empress Jokwa ascended the throne and she ruled the kingdom very well.



So secretly Kokai planned a revolt against Empress Jokwa to remove her from the throne.

For this, Kokai went to the Water Devil and with the help of the water devil, Kokai unleashed a great flood to destroy the kingdom.



Once Empress Jokwa saw the plight of her subjects because of the flood she immediately knew that this was Kokai’s plan. 

She declared war on Kokai.

To fight on the side of the Empress there were two young warriors - Hako and Eiko.

Empress Jokwa made Hako as the general of her army’s Front Forces. Hako was very happy that the Empress had chosen him and he picked up his strongest and longest lance and mounted a red horse and decided to go to battle.

That was when Hako was stopped.

Adapted from Japanese Folk Tales


இளவரசனும் மலர் ராணியின் மகளும் பாகம் 6

 

பறக்கும்  நாகத்தின் அன்னைக்கு அந்த குதிரையை மூன்றாவது நாளும் இளவரசன் பத்திரமாக கொண்டு சேர்த்ததும்  அதிர்ச்சியில் மௌனமானார் . அந்த இளவரசனை பார்த்து “ இதற்கு தங்களுக்கு என்ன பரிசு வேண்டும் “ என்று கேட்பதற்கு , “இந்த குதிரையின் குட்டியை  எனக்கு பரிசாக கொடுங்கள்”  என்று கேட்டார் . எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனே அதற்கு அந்த அன்னை சம்மதித்தார் . அதனுடன் இளவரசனுக்கு ஒரு தங்க கவசத்தையும் பரிசாக அளித்தார்.  இந்த தடவையும் அவரை விருந்திற்கு அழைத்துச் சென்றனர்.  ஆனால் நடுவில் அவர் யார் கண்ணிலும் படாமல் குதிரை லாயத்திற்கு சென்றார் . அங்கு இருந்த குதிரைக்குட்டியின் மீது சவாரி செய்து தான் தினமும் வரும் புல்வெளியை அடைந்தார் . அன்று நடு இரவில் மலர் ராணியின் மகளும் அங்கு வந்து சேர்ந்தார் . அங்கிருந்து அந்தக் குதிரையில் ஏறி அவர்கள் மலர் ராணியின்  அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்கள்.



சிறிது நேரத்தில் இவர்கள் இருவரும் இல்லாததைக் கண்ட பறக்கும் நாகத்தின் அன்னை தன்னுடைய

சகோதரனை ( குளிர் காலம்) எழுப்ப முயன்றார்.  ஆனால் இது அவர் தூங்கும் ஆண்டு என்பதால் அவரை  எளிதாக எழுப்ப முடியவில்லை.  ஆனாலும் மிகவும் கஷ்டப்பட்டு அவரை எழுப்பினார் . விஷயத்தை கேள்விப்பட்ட அந்த பறக்கும் நாகம் மலர் ராணியின் ராஜ்யத்தை அடக்க நினைத்து அதன் மீது போர் தொடுத்தார் . ஆனால் தன்னைச் சுற்றி அந்த மலர் ராணி ஒரு மலர் தோட்டத்தை அமைத்தார் . அந்தத் தோட்டம் இவ்வளவு அடர்த்தியாக இருந்ததால் அதனால் அதற்குள் எதாலும்   நுழைய முடியவில்லை . இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு மலர் ராணி தன்  மகளை அந்த இளவரசனுக்கு மணமுடித்தாள் . அவளுடைய ஒரே கோரிக்கை தன்னுடைய மகள் இளவரசனுடன் கோடை காலத்தில் மட்டும்தான் இருக்க முடியும் , பனிக்காலத்தில் அவள் மலர் ராணியின் வீட்டிற்கு வந்து தங்க வேண்டும் என்பதுதான்.  இதற்கு இந்த இளவரசனும் சம்மதித்தான் . ஆகவேதான் இன்றும் மலர் ராணியின் மகள் 6 மாதம் இளவரசனின் கோட்டையிலும்,  மீதி ஆறு மாதம் பூத்துக் குலுங்கும் தன் அன்னையின் இடத்திலும் வாழ்கிறார் . நமக்கும் நறுமணங்கள் வீசும் பூக்கள் ஆறு மாதம் கிடைக்கின்றன.

இந்தக் கதை தான் வசந்த காலம் , இலையுதிர் காலம்,  கோடை காலம். மற்றும் குளிர் காலத்தின்   அடையாளமாக ஐரோப்பாவில் கருதப்படுகிறது.

 


(“ இளவரசனும் மலர் ராணியின் மகளும் “  கதை இத்துடன் முடிகிறது . இது ஒரு ஐரோப்பிய பழங்கதைகளில் தழுவி எழுதப்பட்டது).

 


இளவரசனும் மலர்ராணி மகளும் பாகம் 5

 

இப்படி  கூறிய அந்த கழுகு அரசன் வானத்தில் பறந்து சென்றது.  அன்று மாலை இளவரசன் வானத்தை  நோக்கிய  போது அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது . ஆயிரம் கருடன்கள் ஒன்று சேர்ந்து அந்தக் குதிரையை பூமிக்கு தள்ளிக் கொண்டு வந்து,  அந்த இளவரசனின் முன்பு நிறுத்தியது . இளவரசனையும் குதிரையும் பார்த்த பறக்கும் பாம்பின் அன்னையின் முகத்தில் வியப்பு அப்பட்டமாக தெரிந்தது . இதற்கு பரிசாக அந்த மூதாட்டி அவனுக்கு தாமிரத்தினால் ஆன ஒரு கவசத்தை கொடுத்து , இன்று இரவு. நான் எல்லோருக்கும் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ள அனுமதித்தார் . அங்கு அந்த மலர் ராணியின்  மகளை காணும் வாய்ப்பை அவர் பெற்றார் . அங்கு நிறைய பறக்கும் நாகங்கள் ஆண் பெண் என்று ஜோடி சேர்த்து ஆடிக் கொண்டிருந்தனர் . ஆனால் அந்த  மலர் ராணியின் மகள் மட்டும் தனியாக இருந்தார் . அவருடைய முகத்தில் தனியான கம்பீரமும்,  நேர்த்தியான அழகும் தெரிந்தது . அவரை அடையாளம் கண்டு கொண்ட இளவரசன் தான் அங்கு வந்த காரணத்தை அவரிடம் கூறினார்.  மலர் ராணியின் மகள் அவரை பார்த்து தலையை அசைத்து , நீங்கள் மூன்று நாளும் அந்தக் குதிரையை மேய்சலுக்குப்பின் திரும்பி கொண்டு வந்து விட்டீர்கள் என்றால் பறக்கும் நாகத்தின் அன்னை உங்களுக்கு ஒரு பரிசு கொடுப்பதாக அறிவிப்பார் .

 


அப்பொழுது நீங்கள் அந்தக் குதிரையை பார்த்துக் கொண்டதற்கு பரிசாக இந்த குதிரையின் குட்டியை கேளுங்கள்.  மலர் ராணியின் மகள் அப்படி எதற்காக கூறினார் என்பது தெரியாவிட்டாலும் இளவரசன் சரி என்பது போல் தலையை அசைத்தார்.

மறுநாள் வழக்கம் போல் அந்த இளவரசன் அந்தக் குதிரையை மேய்க்க எடுத்துச் சென்றபோது , அது எதிர்பார்த்த படியே  மறைந்து விட்டது . ஆனாலும் இளவரசனுக்கு அதை பார்த்து பயமோ  வியப்போ ஏற்படவில்லை . இப்பொழுது அவரிடம் இருந்த மணியை இரண்டு முறை அடித்தார் . உடனே அவர் முன் அந்தக் காட்டின் நரிகளின் அரசன் தோன்றினார் . தோன்றியது மட்டுமல்லாமல் “ உன்னைப் பற்றியும்   , உன் நோக்கம் பற்றியும் எனக்கு எல்லாம் தெரியும் . என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள எல்லா நரிகளையும் அனுப்பி இன்று மாலைக்குள் உன்னிடம் அந்தக் குதிரை வந்து சேரும்படி செய்கிறேன் . அது இப்பொழுது அருகில் உள்ள மலையில் ஒளிந்து கொண்டிருக்கிறது .”என்று கூறினார் . அன்று மாலை இளவரசன் எதிர்பார்த்தபடி ஆயிரக்கணக்கான நரிகள் ஒன்று சேர்ந்து அந்தக் குதிரையை இளவரசனிடம் கொண்டு சேர்த்தது .அவரும் அதை பறக்கும் நாகத்தின் அன்னையிடம் கொண்டு சேர்த்ததும் , அவருக்கு வியப்பானது . இந்த முறை பரிசாக அவருக்கு வெள்ளியினால் ஆன கவசத்தை அவருக்கு வழங்கினார் . அது மட்டும் இல்லாமல் அவரே இளவரசனை அன்றைய இரவு விருந்துக்கு அழைத்துச் சென்றார் . அவரை கண்ட மலராணியின் மகளுக்கும் இரண்டாவது நாளும் இளவரசன் வெற்றிகரமாக குதிரையை திருப்பிக் கொண்டு வந்தது மகிழ்ச்சி அளித்தது .

 


அவர் இளவரசனிடம்”  நாளையும் நீ வெற்றிகரமாக திரும்பி வந்தால்.  அந்த பறக்கும் நாகத்தின் அன்னையிடம் பரிசாக பெற்ற அந்த  குதிரை குட்டியை எடுத்துக்கொண்டு இதே புல்வெளிக்கு நாம் இருவரும்  சென்று , அங்கிருந்து பறந்து சென்று விடுவோம்“ என்றூ கூறினார். எதிர்பார்த்தபடியே மூன்றாவது நாளும் குதிரை காணாமல் போக இளவரசன் மூன்று முறை மணி அடித்தவுடன் மீன்களின் தலைவன் அவர் முன் தோன்றினார் . அவர் குதிரை பக்கத்தில் இருந்த நதியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போது தான் பார்த்ததாகவும் , அதைக் கொண்டு வந்து இளவரசனிடம் சேர்ப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தபடியே செய்யவும் செய்தார்.

 

(5 வது பாகம் முடிவு இது ஒரு ஐரோப்பிய பழங்கதையின் படி தழுவி எழுதப்பட்டது)

இளவரசனும் மலர் ராணி மகளும் பாகம் 4

 

 

அந்த பறக்கும் நாகத்தின் அன்னைக்கு இந்த இளவரசனின் சிரித்த முகமும்  பழகும் முறையும் மிகவும் பிடித்திருந்தது.  இருந்தாலும் அவருக்கு இளவரசனை இன்னும் சிறிது சோதனை செய்ய வேண்டும் என்று தோன்றியது.   ஆகவே “உனக்கு என்னிடம் உண்மையிலேயே வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்,  என்னுடைய குதிரையை நீ குறைந்தது மூன்று நாட்களுக்கு அருகில் உள்ள புல்வெளியில் மேய விட்டு கொண்டு வர வேண்டும்.  அப்படி நீ  குதிரையை கொண்டு வர தவறினால்,  அன்றே உன்னை நாங்கள் கொன்று தின்று விடுவோம்”  என்று கூறினார் . அந்த மூதாட்டி கூறியபடியே அந்தத் தோட்டத்தில் ஒரு குதிரையும் இருந்தது . அதை இழுத்துக் கொண்டு இளவரசன் அந்தப் புல்வெளிக்கு அழைத்துச் சென்றார் . அந்த புல்வெளியை அடைந்த மறு நிமிடமே அந்த குதிரை காணாமல் போய்விட்டது.  இளவரசனும் அங்கு இங்கு என்று எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தாலும்  அவரால் அந்த குதிரையை கண்டுபிடிக்க முடியவில்லை . அவர் திகைத்து நின்று கொண்டிருக்கும் போது தலைக்கு மேல் ஒரு கருடன்  பறப்பதைக் கண்டார் . அப்பொழுதுதான் அவருக்கு தான் முதலில் பள்ளத்திலிருந்து காப்பாற்றிய மூதாட்டியின் நினைவு வந்தது . தன்னுடைய பையில் இருந்து அந்த சிறிய மணியை எடுத்து ஒரு முறை அடித்தார்.  



சிறகடித்துக் கொண்டு பறந்து கொண்டிருந்த கருடன் அவர் முன்னால்  வந்து நின்றதை கண்டார் . ஆனால் அந்த கருடனுக்கு அவர் எதையும் கூற வேண்டியது இருக்கவில்லை. அந்த கருடன்  அவரைப் பார்த்து “ எனக்கு உன்னை பற்றி எல்லாம் தெரியும் . இந்த மணி உனக்கு எப்படி கிடைத்தது என்பதும் எனக்குத் தெரியும் . இப்பொழுது நீ அந்த பறக்கும் நாகத்தின் தாயாரின் குதிரையைத் தேடிக் கொண்டிருக்கிறாய்.  மேலே நீ பார்த்தால் மேகத்துக்கு இடையில் அந்த குதிரை பறப்பதை உன்னால் பார்க்க முடியும்.  நான் என் நண்பர்கள் ஆன எல்லா கருடன்களையும் வானத்துக்கு அனுப்பி அந்த குதிரையை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் படி உத்தரவிடுகிறேன் என்று கூறியது.

 


( இந்தக் கதை ஐரோப்பாவின் பழங்கதைகளில் இருந்து தழுவி எழுதப்பட்டது )

 

பாகம் 5 தொடரும்

இளவரசனும் மலர் ராணியின் மகளும் பாகம் 3

 

இளவரசன் இன்னும் ஒரு வருடம் பயணித்த பிறகு அந்த மூன்றாவது கிழவரையும் சந்தித்தார்.  மலர் அரசியின்  மகளைப் பற்றிய  கேள்விக்கு அவர் கூறிய பதில் “ நீ தேடிக் கொண்டிருக்கும் பறக்கும் நாகம் இங்கிருந்து நாம் பார்க்கும் மலையின் மறுபக்கம் இருக்கிறது.  இப்பொழுது அதற்கு தூங்கும் நேரம்”  இளவரசனின் குழப்ப பார்வையை புரிந்து கொண்ட அந்த கிழவர், “ அந்த பறக்கும் நாகம் ஒரு வருடம் தூங்கும்,  பிறகு ஒரு வருடம் முழித்துக் கொண்டிருக்கும் “ என்று விளக்கிய உடன்,  இதை கேட்ட  அந்த இளவரசன் தன் பயணத்தை தொடங்க நினைக்கும் போது அந்த கிழவர் குறுக்கிட்டு “உனக்கு அந்த ராணியின் மகளை பார்க்க வேண்டும் என்றால் , முதல் மலையை தாண்டி இரண்டாவது மலையில் இருக்க வாய்ப்பு அதிகம் “ என்று கூறினார் . இதை கேட்டு குழப்பத்தில் இருந்த இளவரசனுக்கு கிழவர் மேலும் கூறினார். “  அந்த பறக்கும் நாகத்தின் தாயார் இரண்டாவது மலையில் இருக்கிறார்.  நீ தேடிக் கொண்டிருக்கும் இளவரசி தினமும் அந்த அம்மையாரை சந்திக்க செல்வார் . “  இதைக் கேட்டவுடன் இளவரசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து,  அந்த பெரியவருக்கு நன்றி கூறினார்.  பிறகு அந்த இரண்டாவது மலையை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தார்.

 


அந்த இரண்டாவது மலையை நெருங்கும் போது,  ஒரு தங்கத்தால் ஆன ஒரு கோட்டையில் வைரங்கள் பதித்திருந்த ஜன்னல் கதவுகள் இருப்பதை கண்டார்.  அவர் அந்த தங்க கோட்டைக்குள் நுழையும் போது அவரை நோக்கி 7 பறக்கும் நாகங்கள் வருவதை கண்டார்.  அவை இவரைப் பார்த்து “ தங்களுக்கு என்ன வேண்டும் ?  என்று கேட்டனர் . அப்பொழுது இளவரசர் “ உங்கள் தலைவனான பறக்கும் நாகத்தின் அன்னையைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன் . அவருக்காக  நான் வேலை செய்ய விரும்புகிறேன்

 என்று கூறியவுடன் மகிழ்ச்சி அடைந்தன அந்த பறக்கும் நாகங்கள் . அதில் மூத்த நாகம் அந்த இளவரசனை நோக்கி “வா உன்னை அவரது தாயிடம் அழைத்துச் செல்கிறோம்”  என்று கூறி  பதினோரு பெரிய அறைகளை தாண்டி அழைத்துச் சென்றனர் . அந்த அறைகள் முழுவதும் தங்கத்தாலும் வைரத்தாலும் ஜோடிக்கப்பட்டிருந்தன . பன்னிரண்டாவது அருகில் அந்தத் தாய் நாகம் ஒரு வைர சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் .

 அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகானவராக இல்லாது இருந்தாலும் , அவருக்கு மூன்று தலை இருந்தது . அவருடைய குரலும் கர்ண கொடூரமாக இருந்தது.  ஆனாலும் இளவரசன் அந்த அன்னையைப் பார்த்து அன்பாக சிரித்தார் .

 


(இந்த கதை ஐரோப்பாவின் பழக்கதையிலிருந்து தழுவி எழுதப்பட்ட மூன்றாவது பாகம்)

இளவரசனும் மலர் ராணியின் மகளும் பாகம் 2

 

இப்படி அந்த மூதாட்டி ஒரு அழகான பெண்ணை தான் மணமுடிக்க வேண்டும் என்பதை  கேட்டவுடன் அந்த இளவரசனுக்கு இந்த மூதாட்டி ஒரு தேவதையாக தான் இருக்க வேண்டும் . தான் அவருக்கு உதவியதற்கு பதிலாக இப்பொழுது தனக்கு ஒரு நன்மை செய்கிறாள் , என்று தோன்றியது . ஆகவே அவர் கொடுத்த மணியை மிகவும் பத்திரமாக தன் பையில் வைத்துக் கொண்டார்.  அதன் பிறகு அரண்மனைக்குச் சென்று தன் தந்தையிடம் நடந்ததை கூறி , இப்பொழுது தான் மலர் ராணியின் மகளை காப்பாற்றி கூட்டி வருவதாக  கூறினார் . எல்லா இடத்துக்கும் சென்று அவளை தேடி அழைத்து வருவதாக கூறினார் . அவர் தந்தையும் அதற்கு சம்மதித்த பின் , அடுத்த நாள் தன்னுடைய குதிரையில் இளவரசன் தன் பயணத்தை தொடங்கினார்.  அப்படி ஒரு வருடத்திற்கு மேல் அவருடைய பயணம் தொடர்ந்தும் , அந்த மலர் ராணியின் மகள் எங்கே இருக்கிறாள் என்பதை பற்றி அவருக்கு எந்த விபரமும் கிடைக்கவில்லை .



இதில்  இளவரசனும் , குதிரையும் மிகவும் களைத்துப் போனார்கள் . இளவரசருக்கும் இந்த பயனற்ற பயணத்தால் மிகவும் சோகமாகவும் இருந்தார் .  இப்படி இருக்கும் வேளையில் ஒரு நாள் அவர் ஒரு குடிசையின் முன் நின்று கொண்டிருந்தார் . அந்த குடிசையின் வாயிலில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார் . அவரிடம் இளவரசன் “ இந்த மலர் ராணியின் மகளை கடத்திச் சென்ற பறக்கும் நாகத்தை பற்றி தங்களுக்கு ஏதேனும் தெரியுமா “ ? என்று கேட்டார்.  சிறிது யோசித்து விட்டு அந்த முதியவர் “  எனக்கு ஒன்றும் தெரியாது . இதே பாதையில் இன்னும் ஒரு வருடம் நடந்து சென்றால் என்னுடைய தந்தையின் வீடு வரும் . அவருக்கு இதைப்பற்றி ஏதேனும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு” என்று கூறினார் . இதுவரை எந்தத் தகவலுமே கிடைக்காமல் இருந்த இளவரசருக்கு ஏதோ இந்த அளவாவது ஒரு விபரம் தெரிந்ததே என்று அந்த முதியவருக்கு நன்றி கூறியபடி அவர் காட்டிய பாதையில் பயணத்தை தொடர்ந்து சென்றார்.  இப்படி தொடர்ந்த பயணத்தில் அவருக்கு இன்னொரு முதியவர் தென்பட்டார் . அவரிடமும் இதே கேள்வியை இளவரசர் கேட்டபோது அவரும் எனக்குத் தெரியாது , இன்னும் சிறிது காலம்  நடந்தால் எனது தந்தையின் வீடு வரும்.  அவர் நிச்சயமாக உனக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவியாக  இருப்பார்  என்று கூறினார் .



(இந்த கதை ஐரோப்பாவின் பழங்கதைகளில் இருந்து தழுவி எழுதப்பட்டது)

 

பாகம் 3 தொடரும்.


இளவரசனும் மலர் ராணியின் மகளும் பாகம் 1


ஒரு இளவரசன் நகர்வலம் வரும் பொழுது ஒரு பெரிய  புல்வெளியில் தன் குதிரையில் வந்து கொண்டிருந்தார் . அப்பொழுது அருகில் ஒரு பெரிய பள்ளத்தில் இருந்து அழுகை குரல் அவருக்கு கேட்டது . குதிரையிலிருந்து இறங்கி அவர் சென்று பார்த்த போது ஒரு மூதாட்டி  அந்த பள்ளத்தில் இருந்து வெளியே வர தவித்துக் கொண்டிருந்தார் . இளவரசனை பார்த்தவுடன் “என்னை தயவு செய்து இதிலிருந்து மேலே ஏற்றி விடு”  என்று கேட்டார்.  இளவரசனும் அந்த பெண்மணி வெளியே வர உதவி செய்தார் . அந்தப் பெண்மணி கண்களில் நீருடன் அவருக்கு நன்றி தெரிவித்தார் . அப்பொழுது அந்த இளவரசன் “ நீங்கள் எப்படி இந்த பள்ளத்தில் விழுந்தீர்கள் ? என்று கேட்டார் . அதற்கு”  நான் பக்கத்தில் உள்ள நகரத்தில் என்னுடைய முட்டைகளை  விற்றுவிட்டு வரும்பொழுது தவறி இந்த பள்ளத்தில் விழுந்து விட்டேன்



 நீங்கள் மட்டும் இப்பொழுது வராது இருந்தால் இங்கேயே வெகு நேரம் இருந்திருப்பேன் . தாங்கள் என்னை காப்பாற்றி விட்டீர்கள் . நன்றி”  என்று கூறினார்.  அதற்கு அந்த இளவரசன் “  உங்களுக்கு உடம்பில் நிறைய காயம் ஏற்பட்டிருக்கிறது . ஆகவே நான் உங்களை உங்கள் வீட்டில் விடுகிறேன் “ என்று கூறி அவரையும் தன் குதிரையில் ஏற்றிக்கொண்டார் . அவர்கள் அந்தப் பெண்மணியின் வீட்டை அடைந்தனர்.  அங்கு சென்றவுடன் அந்தப் பெண் “ இப்பொழுது சிறிது நேரம் இங்கே இருங்கள் . நான் இப்பொழுது வந்து விடுகிறேன் “ என்று கூறிவிட்டு சிறிது நேரத்தில் திரும்பி வந்தார் . அப்பொழுது அந்தப் பெண்மணி “ நீங்கள் மிகவும் கருணை உள்ளவராக இருப்பதால் உங்களுக்கு ஒரு பரிசு தர விரும்புகிறேன்.  ஒரு அழகான பெண்ணை மண முடிக்க உங்களுக்கு விருப்பமா?”  என்று  கேட்டாள் . இளவரசருக்கு மிகவும் வியப்பாக இருந்தாலும் “ஆம்”  என்ற முறையில் தன் தலையை ஆட்டினார் .

 அதற்கு அந்த மூதாட்டி “ அந்தப் பெண்  இந்த நாட்டின் மலர் ராணியின் மகள் . எனக்குத் தெரிந்தவரை இந்த உலகிலேயே மிகவும் அழகானவள் . அவளை நீ மண முடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  ஆனால் அதில் ஒரு பிரச்சனை இருக்கிறது . அவள் இப்பொழுது ஒரு” பறக்கும் நாகத்தின் (dragon)  பிடியில் சிக்கி இருக்கிறாள்.  அவளை அதனிடமிருந்து நீ விடுவித்தால் , அவளை நீ மணக்கலாம்”  என்று கூறினாள் .



அந்த மூதாட்டி இப்படி கூறிவிட்டு இளவரசனிடம் ஒரு மணியை கொடுத்தாள் . அதை ஒரு முறை அடிக்கும் போது பறவைகளின் அரசனான கருடன் உன் முன் தோன்றுவார் . இரண்டு முறை இந்த மணியை அடித்தால் , நரிகளின் மன்னன் உன் உதவிக்கு வருவார் . மூன்று முறை இந்த மணியை அடித்தால் , மீன்களின் தலைவன் உனக்கு உதவ நிச்சயம் வருவார் .

 இந்த அழகான இளவரசியை மீட்கும் பணியில் இந்த மூவரும் உனக்கு நிச்சயம் உதவுவார்கள்.  ஆகவே நீ அந்த இளவரசியை அந்த பறக்கும் நாகத்திடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் உடனே இறங்கு”  என்று கூறி முடித்தார் .

 

மூன்று இளவரசிகள் - பாகம் 2

 

இப்படி வெகு நாட்கள் சென்ற பின் ஒரு ஏழை அந்த காட்டில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு பிடில் கிடப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு அதை எடுத்தவுடன் அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது . அந்த ஃபிடில் நிச்சயமாக ஏதோ ஒரு அதிசயம் போல் இருந்தது .ஏனென்றால் அந்த ஏழையால் அதில் பாட்டு வாசிக்க முடிந்தது மட்டுமல்லாமல் அந்த ஃபீடில் தானே பாடவும் செய்தது.

 


அவர்  அதை எடுத்துக்கொண்டு தன் நாட்டிற்கு வந்தது மட்டுமல்லாமல் , எல்லா இடங்களுக்கும் சென்று அதில் பாட்டு பாடினார்.  அதனுடன் அந்த பிடிலும் தானாகவே பாடியதனால் மக்கள் அந்த அதிசயத்தை காண கூடியபோது , அந்த மனிதன் ,அந்த ஃபிடில் , இரண்டுமே புகழ் பெற ஆரம்பித்தன .  அந்த மனிதன் புகழ் அடைந்ததுடன் பணக்காரனாகவும் மாறியதில் எந்த அதிசயமும் இல்லை . அவனிடம் புகழுடன் பணமும் சேர்ந்தது . சீக்கிரமே இந்த விஷயம் இளவரசிகளின் அப்பாவான  ராஜாவின் காதுகளை சென்று அடைந்தது .  ராஜா அவரை அழைத்து தனக்கும் தன் குடும்பத்திற்கும் மட்டும் தனியாக வந்து இந்த அதிசயத்தை பாடியும்,  செய்தும் காட்டும்படி கேட்டுக் கொண்டார் . அவர் “நீங்கள் மிகவும் அற்புதமாக பாடுகின்றீர்கள் என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள் ஆகவே என்னுடைய நாட்டிற்கு வந்து இந்த என் அரண்மனையை

கௌரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் . அந்த நாட்டின் மன்னன் கேட்டும் அந்த முன்னாள் ஏழை வர மறுத்து விட்டார்.  ஏன்  என்று கேட்டபோது உங்களால் நான் விரும்பும் அளவுக்கு பணம் கொடுக்க முடியாது . என்னிடம் ஏராளமாக பணம் இருக்கிறது.  நான் இப்பொழுது அங்கு இங்கு சென்று தான் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.  ஆகவே என்னால் உங்கள் நாட்டிற்கு வர முடியாது என்று கூறிவிட்டார் .

இப்படி அந்த ராஜா பலமுறை விரும்பி கேட்டும் அவர் அரண்மனைக்கு வந்து வாசிக்கவும்,  பாடவும் மறுத்துவிட்டபோது , அந்த ராஜா மிகவும் வருத்தத்துடன் “ எங்கள் நாட்டில் பல துக்ககரமான நிகழ்வுகள் நிகழ்ந்துவிட்டன.  நாங்கள் எங்கள் அருமை மகளை இழந்து விட்டோம் . நீங்கள் இங்கு வந்து சிறிது நேரம் உங்களுடைய இசையால் எங்கள் கவலைகளை போக்கினால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்”  என்று கூறினார் . இவ்வளவு துக்கத்துடன் மன்னர் கூறியவுடன் அவரும் சரி என்று சொல்லி அந்த ராஜாவின் அரண்மனைக்கு வந்து பாட்டு பாடுவதற்கு சம்மதித்தார்.  அப்பொழுது அவர் தன்னுடன் தன் பிடிலும் பாடும் என்று நிச்சயமாக நம்பினார். அவர் நம்பியப்படியே அந்த பிடிலும் ஒரு பாட்டு பாடியது.  அதைக் கேட்டவுடன் அங்கிருந்த எல்லோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.  அந்தப் பாட்டு அந்த மூன்றாவது இளவரசி பாடுவது போல் இருந்தது.  எப்படி  ராணியின் விருப்ப்படி திராட்சை பழங்கள் எடுக்க தோட்டத்துக்கு சென்றதுடன் தொடங்கி , எப்படி இரு சகோதரிகள் மூன்றாவது சகோதரியை  ஒரு டிரெஸ்ஸுக்காக கொன்றனர் என்றவரை முடிந்தது.  அப்பொழுது அலைந்து கொண்டிருந்த அந்த மூன்றாவது அன்பான இளவரசியின்  ஆவி அந்த பிடிலில் அடைக்கலமானது வரை சொல்லி முடித்தது . அப்பொழுதுதான் அங்கு உள்ள எல்லோருக்கும் புரிந்தது இதுவரை தானாக பாடியது அந்த பிடில் இல்லை,  அதனுள் இருந்த அந்த இளவரசியின் ஆவி என்று.  இதனால் கடும் கோபம் கொண்ட ராஜா தன் மூத்த இரு மகள்களையும் தண்டிக்க வேண்டும் என்று விரும்பினார் . அப்பொழுது எல்லோரும் அதிசயிக்கும் விதமாக அந்த பிடிலில் இருந்து அந்த மூன்றாவது இளவரசி எல்லோரும்  பார்க்கும்படி அவர்கள் முன் தோன்றினாள் . அவள் தன்னுடைய மூத்த சகோதரிகளை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி அந்த ராஜாவிடம் கேட்டுக் கொண்டாள்.  அப்படி செய்தால் எல்லோரும் பழையதை மறந்து திரும்பவும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கூறினாள்.  இதை கேட்ட ராஜா மிகவும் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார்.  ஏனென்றால் அவருக்கு தன் மகள் உயிருடன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  இதற்குப் பிறகு அவர்கள் எல்லோரும் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள்

 


(இந்த கதை அங்கேரி நாட்டின் பழங்கதைகளில் இருந்து எடுக்கப்பட்டது)

மூன்று இளவரசிகள் - பாகம் 1


ராஜா ராணி கதைகளை பார்த்து வந்த நாம் இன்று பார்க்கப் போவது மூன்று இளவரசிகளைப் பற்றிய கதை .

ஒரு ராஜா ராணிக்கு மூன்று இளவரசிகள் இருந்தனர் .அதில் முதல் இருவர் கெட்ட எண்ணம் படைத்தவர்களாக இருந்தனர் . மூன்றாவது இளவரசி அன்பானவராக இருந்ததால் குடிமக்கள் அவரை மிகவும் நேசித்தனர்.

ஒரு நாள் ராணி தன் 3 பெண்களையும் கூப்பிட்டு “இன்று நான் உங்களுக்கு ஒரு சிறிய பரிட்சை வைக்கப் போகிறேன். என்னிடம் ஒரு சிவப்பு நிற டிரஸ் இருக்கிறது  அது உங்கள் மூவருக்குமே மிகவும் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால் உங்களில் திறமையானவர் அதை பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதை நீங்கள் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  ஆனால் உங்களில் யாருக்கு கொடுப்பது என்பதில் எனக்கு தீர்மானம் செய்ய முடியவில்லை . அதனால் உங்களுக்கு ஒரு பரிட்சை,  நம் அரண்மனையைச் சுற்றி ஏராளமான திராட்சை கொடிகள் இருப்பது உங்களுக்குத் தெரியும்.  நீங்கள் வெளியே சென்று அதை பறித்து வர வேண்டும்.  யார் மிக அதிகமாக கொண்டு வருகிறீர்களோ அவர்களுக்கு இந்த ஆடையை கொடுப்பதாக தீர்மானித்திருக்கிறேன் “ என்றார்



உடனே அந்த மூவரும் வெளியே ஓடினர். மூவருமே அதிக பழங்களை பறிக்க முயலும் போது,  முதல் இரண்டு சகோதரிகளுக்கு புரிந்தது மூன்றாவது பெண் மிகவும் அதிகமாக பழங்களை பறித்திருக்கிறார் என்று.அவள் இதை எடுத்துக் கொண்டு அம்மாவிடம் சென்றால் அவளுக்குத்தான் அந்த ஆடை கிடைக்கும் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் இல்லை. அதை  ஏதேனும் செய்து தடுக்க வேண்டும் என்று நினைத்து  இருவரும் அந்த மூன்றாவது இளவரசியை கொன்று , அவளுடைய உடலை அந்த இடத்திலேயே புதைத்து விட்டு அரண்மனை நோக்கி சென்றார்கள் . அங்கு சென்ற அவர்கள் ஓ என்று கதறி ராணியிடம் “நாங்கள் பழங்களை பறிக்கச் சென்ற இடத்தில் மூன்று திருடர்கள் எங்களை தாக்கினார்கள் . .நாங்கள் எவ்வளவோ முயன்றும் எங்களால் அவர்களை வெல்ல முடியவில்லை. அவர்கள் தங்கையை  கொன்று விட்டார்கள். நாங்கள் எவ்வளவு முயன்றும் அவளை காப்பாற்ற முடியவில்லை”  என்று சொல்லி கதறினார்கள்.  இதைக் கேட்ட ராஜாவும் ராணியும் வருத்தப்பட்டார்களே தவிர, இந்த இருவரையும் சந்தேகப்படவில்லை.



இந்நிலையில் இளவரசி கொல்லப்பட்ட இடத்திலிருந்த  பிடில் (வயலின்) இதுவரை யார் கண்ணிலும் படவில்லை  என்பது ஒரு அதிசயம்.

(ஹங்கேரி நாட்டின் பழங்கதைகளில் இருந்து எடுக்கப்பட்டது .  இந்த கதை பாகம் இரண்டில் தொடர்கிறது.)

கூனை நிமிர்த்துவது எப்படி?

 

இன்று நாம் பார்க்கப் போகும் கதை நம் எல்லோருக்கும் அறிமுகமான தெனாலிராமன் பற்றியது.

கிருஷ்ணதேவராயர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் மன்னராக இருந்தபோது அவருக்கு மதி மந்திரியாகவும், அவருடைய அவையில் கலக்கமான சூழ்நிலை வரும்போது அவையை கலகலப்பாக்கும் ஒரு பொறுப்பும் அவருக்கு இருந்தது.

தெனாலிராமனுக்கு அவையை கலகலப்பாக வைத்துக் கொள்வதுடன் சில சமயங்களில் அந்த அவையில் உள்ளோர்களுக்கும், மன்னருக்கும் சில விஷயங்களை எளிதாகவும் எல்லோருக்கும் புரியும் படியும் சொல்ல வேண்டிய பொறுப்பு இருந்தது. ஆனால் அதை மிகவும் கவனமுடன் யாருக்கும் கோபம், தாபம் ,இல்லாத வகையில் செய்ய வேண்டி இருந்தது. தெனாலிராமனுக்கு அவனுடைய இயற்கையான கலகலப்பான  செய்கையால் எவரையும் புண் படுத்தாமல்  இந்த வேலையை செய்ய முடிந்தது.

ஆனால் யானைக்கும் அடிசறுக்கும் என்பதைப் போல் ஒரு நாள் ராமனின் சாதாரணமாக நன்றாக முடியும் அவருடைய செயல், சற்று எல்லை மீறி மன்னருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. அதனால் மன்னர் ராமனை, பூமியில் புதைத்து யானையின் காலால் இடரும்படி உத்தரவிட்டார்.



அந்த உத்தரவின் படி காவலர்கள் ராமனை ஊருக்கு வெளியே ஒரு இடத்தில் புதைத்து வைத்துவிட்டு, அவனுடைய தலை மட்டும் வெளியே தெரியும்படி வைத்துவிட்டு, யானையை அழைத்து வருவதற்காக சென்றனர். இந்த நிலையில் ராமனால் எப்படியும் தப்பிக்க முடியாது என்ற நம்பினார்கள்.

ராமனை அவர்கள் புதைத்த இடம் ஒரு நதிக்கரையில் இருந்ததால் ஒரு வண்ணான் அழுக்குத் துணிகளை துவைப்பதற்காக அங்கு அப்பொழுது வந்து சேர்ந்தார்.

அந்த வண்ணானுக்கு இயற்கையிலேயே சிறிது கூன் இருந்தது. அது வருட கணக்கில் அதிக சுமை தூக்கி வந்து, அது தாங்க முடியாத அளவுக்கு கூனனாக மாறிப் போயிருந்தார் .ராமனை இந்த நிலையில் பார்த்தவுடன் அவருக்கு தூக்கி வாரி போட்டது. யார் இவரை இப்படி பூமியில் புதைத்து வைத்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார். பக்கத்தில் சுற்று முற்றும் பார்த்தபோது காவலர்களும் யாரும் இல்லை .ஆகவே அவருக்கு இது தண்டனைக்காக அவரை யாரும் புதைத்து வைத்திருப்பதாக தோன்றவே இல்லை. ராமனை பார்த்தவுடன் இவர் ஒரு பெரிய யோகியாக இருக்க வேண்டும். ஆகவே தான் இப்படி மண்ணுக்குள் புதைத்து இருந்த போதும் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டார். ஆகவே ராமனை பார்த்துஐயா இங்கு தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு ராமன் ஒரு புன்னகையுடன்நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ஞானி இல்லை. உன்னை மாதிரியே நானும் ஒரு சாதாரண வண்ணான் தான் என்று கூறினார்.

அந்த வண்ணான் ஆச்சரியத்துடன்அப்படி என்றால் தாங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார்தன்னுடைய இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படி அசகாய சாகசம் செய்வது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய கேள்விக்கு இராமன்நானும் உங்களைப் போல் ஒரு வண்ணான் தான். தினமும் துணிகளை சுமந்து சுமந்து எனக்கு கூன் விழுந்து விட்டது. அதை சரி செய்வதற்காக இப்பொழுது இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறேன்என்று கூறினார் .அதற்கு அந்த வண்ணான்கூனை நிமிர்த்துவது இவ்வளவு எளிமையான முயற்சியால் முடியுமா? என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அதற்கு ராமன்எளிதாக முடியும்என்னை நீ வெளியே இப்பொழுது எடுத்து விட்டால் இந்த இடத்தில் உன்னை வைத்துவிட்டு உன் கூனை சிறிது நேரத்துல என்னால் சரி செய்ய முடியும்என்று கூறினார் இவ்வளவு எளிதாக கூனை நிமிர்ந்த முடியும் என்பதில் அந்த வண்ணனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது . உடனே ராமனுக்கு அருகிலேயே சிறிது பள்ளம் தோண்டி அந்தப் பள்ளத்தை பெரிதாக்கி ராமனை வெளியே வரச் செய்தார். அப்பொழுது ராமன் தெளிவாக நேராக எழுந்து நிற்பதை பார்த்தவுடன் அவருக்கு இவ்வளவு எளிதான ஒரு சிகிச்சை தனக்கு யாரேனும் செய்ய மாட்டார்களா? என்ற எண்ணம் தோன்றியது. அதனால் ராமனிடம்தயவு செய்து என்னை இந்த மாதிரி புதைக்க உதவுகிறீர்களா?”  என்று கேட்டவுடன் மறுக்க முடியாமல் செய்வது போல இராமன் அவர் சொன்னபடி செய்ய ஆரம்பித்தார். ஆனால் இந்த வேலை முடிந்தவுடன் ஒரு யானை தன்னை நோக்கி வருவதை பார்த்து அந்த வண்ணான் கதி கலங்கிப் போனார். வேறு வழி இல்லாமல்நான் குற்றவாளி அல்ல, என்னுடைய கூனை நிமிர்த்துவதற்காக ஒரு பெரியவர் சொன்னதற்காக இந்த பள்ளத்தில் இருக்கிறேன் இதற்கு முன் இங்கு இருந்த வண்ணான் இந்த சிகிச்சையில் குணமாகி வெளியே வந்ததை பார்த்தேன். ஆகவே அவர் என்னை இப்படி நிற்க வைத்து விட்டார்இந்த யானையை தள்ளிப் போகச் சொல்லுங்கள்என்று கதறியவுடன், காவலர்களுக்கு உண்மை புரிந்தது. காவலர்களும் மன்னரிடம் சென்று நடந்ததை கூறினார்கள். தெனாலிராமனின் சாமர்த்தியத்தை கண்டு வியந்து அவருடைய தண்டனையை மன்னர் நிறுத்தி வைத்தார் என்று சொல்லவும் வேண்டுமா

 


(இந்தக் கதை இந்தியாவில் செவி வழியாக வழி வழியாக சொல்லப்படும் கதை)