Friday, August 16, 2024

அன்னையின் அருள் பகுதி 1

 

நாம் இன்று பார்க்க போகும் பழங்கதை ஜப்பானிய மொழியில் வழங்குவது .

ஆகவே இதில் வரும் பெயர்கள் நமக்கு புதுமையாக இருந்தாலும் , கதையும் புதுவிதமாக இருப்பதால் எல்லோரும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஜப்பானின் காஷிகோயே  என்ற நதிக்கரையில் நடந்த சம்பவம் இது. அதை ஒட்டி உள்ள சதுப்பு நிலத்தில் ஐந்து பயங்கரமான பறக்கும் முதலைகள் இருந்தன.  அவை அந்த ஊரில் உள்ள இளம் பெண்களை உண்ணுவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தனர்.  அங்கு உள்ள மனிதர்களால் இந்த முதலைகளை எதுவும் செய்ய முடியவில்லை. அந்த ஊரில் காவல் தெய்வமான பென்டன் சாமா என்ற தேவதையை  அவர்கள் நம்பியிருந்தார்கள்.  அந்த தேவதையால் மக்களுக்கு,  குறிப்பாக தாய்மார்களுக்கு அன்பு,  அழகு முதலியவற்றை கொடுக்கும் திறமை  பென்டன் சாமாவிடம் இருந்தது . பென்டன் சாமாவிற்கு நிறைய ஆண் குழந்தைகள் இருந்தன.  முதல் குழந்தை டை குகோ, செல்வங்களை மக்களுக்கு வாரி வழங்கும் தன்மை உடையது. அடுத்த மகன் ஹ டேய் மர்மங்கள் மிகுந்த மகனாக விளங்கினார்.   இன்னொரு மகன் எபிசூ,  அங்கு இருந்த மீனவர்களின் காக்கும் தெய்வமாக விளங்கினார்.

அந்த ஊரில் தலைவனின் செல்ல மகள் ஓ மே ஷான் என்ற அழகான பெண் . அவள் கடவுளிடம் தன் காதலனை கைபிடிக்க அருளும்படி வேண்டினாள் . ஆனால் அவளுடைய காதலன் ஒரு மீனவன்.  மீனவர்களை குறி வைத்து அந்த பறக்கும் முதலைகள் கொன்றதால் ஓமேஷானின் தந்தை அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.  அந்த மீனவனின் பெயர் ஹா குகா.  அவள் தந்தை முதலைகளை அழிந்தால்தான் உன்னை ஒரு மீனவனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன் என்று உறுதியாக கூறினார் . அவள் பென்டன் சோமாவிடம் தன் தந்தையின் மனதை மாற்றுவதற்கு உதவுவதற்காக வேண்டினாள்.  உங்கள் மகன் எபிஷு விடம் கூறி திருமணத்திற்கு என் தந்தையை சம்மதிக்க வைக்கும் படி  வேண்டினாள்.


No comments:

Post a Comment