Friday, August 16, 2024

அன்னையின் அருள் - பகுதி இரண்டு


பென்டன் சோமா அந்த பெண்ணின் பிரார்த்தனையை கேட்டு,  தன் மகன் செல்வத்தை வாறி வழங்கும் டைகுகோ வை அழைத்து ஹகூகாக என்ற அந்த  மீனவனுக்கு அருள் புரியுமாறு கூறினார்.  அதன்படியே அன்று

ஹ குகாவுக்கு ஏராளமான மீன்கள் கிடைத்தன.  அதனால் அவன் பெரும் பணக்காரனாக மாறினான்.  அவன்  அந்த ஊரில் இருந்த கல்யாண தரகரை அணுகி உமேசானின் தந்தையை அணுகி தன் திருமணத்தை அவளுடன் நடத்தி வைக்க ஏற்பாடு செய்ய கூறினார். அந்த தரகரும் உமேசானின் தந்தையை அணுகி  இப்பொழுது ஹகூகா பணக்காரனாக இருப்பதால் உன் மகளை அவனுக்கு திருமணம் முடிக்க ஏதும் தடை இல்லை என்று கூறி திருமணத்தை முடித்து

வைப்பதற்காக அணுகினார்.  ஆனால் அவள் தந்தை அந்த மீனவர்களை  கொல்லும்  முதலைகள் இறக்கும் வரை தன் மகளை எந்த ஒரு மீனவனுக்கும் மணமுடிக்க முடியாது என்று கூறினார் . தரகரும் அவர் கூறியதை ஹகு காவிடம் கூறினார்.  இதை கேட்ட  உமேசான் மறுபடியும் பென்டன் சாமாவை அணுகி இந்த முதலைகள் எங்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருப்பதற்கு உன் மகன் தீரம் மிகுந்த அடேய் இடம் கூறும்படி கூறினாள்.


No comments:

Post a Comment