Saturday, August 17, 2024

விதியின் விசித்திரம் - பகுதி 1

 

ஹர்சபுரா என்ற நாட்டில் ஒரு வியாபாரி இருந்தார் .அவர் பெயர் சமுத்திர சூரா . அவர் மிகவும் நல்ல குணங்கள் படைத்தவராக இருந்ததுடன் பிறருக்கு உதவும் குணங்களுடன் இருந்தார்.   அவர் ஒரு நாள் வியாபார நிமித்தமாக ஸ்வர்ணத்திவீப்பா என்ற தீவிற்கு செல்ல வேண்டி இருந்தது . அந்த தீவில் அவர் அனேக பொருள்களை விற்று நிதியை குவிக்க முடிந்தது . இதன் பிறகு அவர் தன் நாட்டுக்கு திரும்ப முடிவெடுத்தார் .

துரதிஷ்டவசமாக திரும்பும் போது அவருடைய கப்பல்  புயலால் கவிழ்ந்து நாசமானது . ஆனால் இது நடந்த இடம் கடற்கரையில் இருந்து சிறிது அருகில் இருந்ததால் , அவர் நீந்தி அந்தக் கரையை அடைந்தார். அங்கு கடற்கரையில் ஒரு பிணம் இருந்ததை கவனித்தார்.  அவர் யாராக இருந்தாலும் தான் சந்தித்த அதே புயல்தான் அவர் இறப்பிற்கும் காரணம் என்று கணித்தார் . அவர் அந்த இறந்த மனிதனிடம் இருக்கும் ஒரு பையை திறந்து பார்த்தபோது அதில் ஒரு வைர நெக்லஸ் இருந்தது . சமுத்திர சூராவுக்கு அதை பார்த்து திகைப்பாக இருந்தாலும் அதை எடுத்து தன்னுடைய கப்பலில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடு செய்து கொள்ளலாம் என்று அதை தன்னிடம் வைத்துக் கொண்டார்.  அதை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள நகரத்திற்கு சென்றார்.  அங்கு களைப்பினால் ஒரு மரத்தடியில் படுத்து உறங்கினார் . அந்த நகரின் காவலர் அந்த இடத்துக்கு வந்த போது சமுத்திர சூராவையும் அவர் பையில் இருந்த வைர நெக்லஸை  கவனித்தார்.  உடனே அந்த காவலருக்கு தெரிந்து விட்டது அந்த நாட்டின் இளவரசியான சக்கரசேனா வின் நகை அது என்று.  ஒரு திருடனை பிடித்து விட்டோம் என்ற கர்வத்தோடு சமுத்திர சூராவை அந்த நாட்டின் அரசனிடம் அந்தக் காவலன் அழைத்துச் சென்றார்.  அரசனுக்கு அந்த நகையை பார்த்தவுடன் இவன்தான் திருடன் என்று முடிவு செய்து உடனே சமுத்திர சேனாவை சிறைக்கு அனுப்பினார்.

( இந்த கதை கதா சரித சாகரா என்ற இந்திய பழங்க்கதையை தழுவி எழுதப்பட்டது)

No comments:

Post a Comment