Sunday, August 18, 2024

மகத மன்னனும் மதி மந்திரியும் - பகுதி 4

 

இந்த சன்னியாசியின் மதிக்கூர்மைக்கும்  தீர்க்கதரிசனத்திற்கு அந்த பயிற்சியாளர் அடிமையானார் . அந்த யானை எங்கே ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது என்ற விஷயத்தையும் கூறினார் .

அன்று இரவு மந்திரி மந்திர குப்தா,  ஒரு மூங்கிலை எடுத்து அதில் துளையிட்டு ஒரு விஷப் பாம்பை அதில் அடக்கினார் . அந்த சன்னியாசியின் உதவிக்கு நன்றி கூறும் விதமாக , அன்று அந்தப் பயிற்சியாளர் சன்னியாசிக்கு ஒரு பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்தார் .

அந்த பயிற்சியாளரும் அவர் மனைவியும் விருந்திற்கு ஏற்பாடு  செய்து கொண்டிருக்கும் போது,  மந்திர குப்தா உள்ளே சென்று அந்த யானை இருக்கும் இடத்தில் , அந்த பாம்புடன் இருக்கும் மூங்கிலை வைத்துவிட்டு திரும்பி வந்தார்.  விருந்து முடிந்தவுடன் எதுவுமே நடப்பது போல் அவர் தன் இருப்பிடத்திற்கு திரும்பினார் . அந்த ராஜ்ஜியத்தை விட்டு தன்னுடைய நாட்டுக்கு திரும்பி வந்து விட்டார் .

 

அன்று இரவே அவர் அங்கு யானையின் அருகில் வைத்துவிட்ட மூங்கிலில் இருந்து வெளியே வந்த பாம்பு அந்த யானையை தீண்டியது . மறுநாள் அந்த பயிற்சியாளரும் மன்னரும் பாம்பு  தீண்டி அந்த யானை இறந்திருப்பதை கண்டு மிகுந்த வருத்தமடைந்தனர்.

மந்திரி மந்திர குப்தா திரும்பி வந்தவுடன் , மன்னர் பத்திரபாகு விடம் சென்று “இப்பொழுது தாங்கள் வாரணாசி மன்னரிடம் சென்று அவரது மகள் அனங்க லீலாவை மணமுடித்து வைக்கும் படி கேளுங்கள் அவர் மறுக்க மாட்டார்”  என்று கூறினார் . அதன்படியே அவரிடம் சென்று அனங்க லீலாவை தனக்கு மணமுடித்துக் கொடுக்கும்படி கேட்டார்.  இப்பொழுது யானையின் பலம் இல்லாத வாரணாசி மன்னனும் வேறு வழியில்லாமல் , மணமுடித்து வைத்தார் .

பகுதி நான்குடன் கதை  நிறைவு .

 

(இந்த கதை கதா சரித் சாகரா என்ற நூலில் இருந்து தழுவி எழுதப்பட்டது)

No comments:

Post a Comment