Saturday, August 17, 2024

மகத மன்னனும் மதி மந்திரியும் - பகுதி 3

 


 

மறுநாள் அந்த மந்திரியின் தொண்டர்கள்,  அந்த யானை பயிற்சியாளரின் வீட்டுக்கு சென்ற பொழுது மனைவியை காணாத அதிர்ச்சியில் அவர் விஷம் உட்கொண்டு தவிப்பதை கவனித்தார்கள்.  உடனே அவருக்கு தகுந்த மருத்துவம் பார்த்து, “  நீங்கள் எங்கள் குருவை சரணடைந்தால் அவர் உங்கள் மனைவியை எப்படியும் கண்டுபிடித்து கொடுப்பார் உங்கள் விஷத்தை முறிக்கும் சக்தி அவருக்கு உண்டு”  என்று கூறி அவரை தங்கள் குருவை அணுகும் படி கூறினர் . “ உங்கள் கஷ்டம் என்ன என்று எங்களுக்குத் தெரியாது ஆனால் யாரும் கூறாமலேயே எங்கள் குருவிற்கு எல்லாம் தெரியும் ஆகவே நீங்கள் எங்களுடன் வாருங்கள்”  என்று கூறி அந்த மதி மந்திரி இடம் அழைத்துச் சென்றனர் .

அங்கு சென்றதும் அந்த மதி மந்திரி யானை பயிற்சியாளரை பார்த்து “ “ உங்கள் துக்கம் உங்களை பார்த்தவுடனேயே எனக்கு தெரிந்து விட்டது.  உங்களுடைய பிரச்சனை என்னால் எளிதாக தீர்த்து வைக்க முடியும்.  தாங்கள் தங்கள் மனைவியை காணவில்லை என்று வருத்தத்துடன் இருக்கிறீர்கள்”  என்று கூறியவுடன் யானை பயிற்சியாளர் குரல் தழுதழுக்க “ ஆம் ஐயா,  அதுதான் என் பிரச்சினை “ என்று கூறினார்.  இதைக் கூறியவுடன் அந்த மந்திரி ஏதோ தியானத்தில் அமர்ந்தவர் போல் யோசித்து விட்டு , “ உன் மனைவியை அவள் விருப்பத்திற்கு எதிராக சிலர் இந்த ராஜ்ஜியத்திலேயே ஒரு இடத்தில் அடைத்து வைத்திருக்கின்றனர்”  என்று கூறியவுடன் அந்த குருவின் தீர்க்கதரிசனத்தை யானை பயிற்சியாளர் வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்தார் . அவர் வியப்பு கலையும் முன்னே அந்த சன்னியாசி அவர் மனைவி இருக்கும் இடத்தை விளக்கமாக எடுத்து கூறினார் . அவருக்கு நன்றி கூறிவிட்டு பயிற்சியாளரும் அரண்மனை காவலர்களை அழித்துக் கொண்டு அந்த இடத்திற்குச் சென்று தன் மனைவியை மீட்டு வந்தார்.  இதனால் அந்த பயிற்சியாளருக்கு அடைந்த  சந்தோஷமும் வியப்பும் அளவில் அடங்காததாக இருந்தது . தன் மனைவி வீட்டுக்கு எந்த விதமான கஷ்டமும் இல்லாமல் திரும்பி வந்ததற்கு அந்த குருவும்,  சன்னியாசியுமான அந்த மனிதரே காரணம் என்று அவர் நம்பினார்.  திரும்பத் திரும்ப அவருக்கு நன்றி கூறினார்.

 பகுதி மூன்று நிறைவு

 

(இந்த கதை கதா சரித் சாகரா என்ற நூலை தழுவி எழுதப்பட்டது)

No comments:

Post a Comment